ஆண்டவர் கிறிஸ்துவை மாமன்னராக வழிபடும் நாள் , கிறிஸ்து அரசரின்
பெருவிழா .திருப்பாக்கள் மெசியாவை அரசராக அறிமுகப்படுத்துகின்றன . அவர் தாவீது மன்னரின்
அரியணையில் அமர்வார் .அவரது ஆட்சிக்கு முடிவு இராது என்பது எசாயா இறைவாக்கு . “எம் மாமன்னர்
நீதிபதியாகத் தோன்றி உலகத்திற்குத் தீர்ப்பு வழங்குவார்” . செயலளவில் காட்டப்படும் அன்பின்
அடிப்படையிலேயே இறுதித் தீர்ப்பு அமையும் .
தீர்ப்பளிக்க வரும் நீதிபதி
“தாமே” என்று இயேசு அறிவித்துள்ளார் . அவர் தம் மாட்சிமையில் வானதூதர் புடை சூழ இறுதி
நாளில் தோன்றுவார் .வலப்பக்கம் உள்ள நல்லவர்களை உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஏற்பாடு
செய்துள்ள அரசு உங்களுக்கு உரியதாகுக என்று கூறி வரவேற்பார் . இடப்பக்கம் உள்ளவரை என்னைவிட்டு
அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்துள்ள முடிவில்லா நெருப்புக்குள்
செல்லுங்கள் என்று சபிப்பார் . இறுதி நாளில் நாம் எப்பக்கம் ?
பிறரன்பே
இறையன்பு . ஒருவனது அறிவு , ஆற்றல் , செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பு
வழங்கப்படவில்லை . அடிப்படைத் தேவைகளில் ஒரு பக்தன் தன்னால் ஆன உதவி புரிந்திருந்தால்
அதைத் தமக்கே செய்ததாக இயேசு ஏற்றுக் கொள்கிறார் . “இரக்கத்தின் செயல்களைச் செய்யாதவன்
இறையன்பு இல்லாதவன்” என்கிறார் தூய யோவான் .
அன்பு செயல்களிலே மலர வேண்டும்
. செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் .
சிறையில் இருந்த தம்மை
விடுவித்தாதகவோ , நோயுற்று இருந்த தம்மைக் குணமாக்கியதாகவோ கூறவில்லை . அங்கிருந்த தம்மைப்
பார்க்க வந்த பரோபகாரச் செயலுக்காகவே இயேசு அவர்களைப் பாராட்டுகிறார் . ஆண்டவர் தாம்
அவர்கள் உருவில் துன்புற்றார் என்பதை அறியாமலே அவர்களுக்கு அவர்கள் உதவியுள்ளனர் . தொழு
நோயாளனைத் தொட்டுத் தூக்கித் தழுவிக்கொண்டபொழுது அவனில் கிறிஸ்துவின் முகத்தைக் கண்டவர்
பிரான்சிஸ் அசிசி . குளிரில் நடுங்கிய ஓர் ஏழைக்குத் தன் போர்வையைப் பங்கிட்டளித்த மார்ட்டீனுக்கு
காட்சியளித்த இயேசு “இதோ நீ கொடுத்த பாதிப் போர்வை” என்று கூறியது வரலாறு . இப்பக்தர்கள்
இவ்வுவமையின் பொருளைப் புரிந்து கொண்டவர்கள் . அயலானுக்கு அன்பு செய்யாதவனிடம் இறுதி
நாளில் கேட்கப்படும் கேள்வி வேத நூல்களின் விளக்கம் அன்று . அறிந்தவற்றைச் செயல்படுத்தினாயா
? என்பதேயாகும் . “பட்டினிச் சாவுகளைப்பற்றி நீ கவலைப்படவில்லையே . பிணியாளரைச் சந்திக்கவில்லையே”
என்ற குற்றச் சாட்டேயாகும் . இயேசு அன்பின் அரசர் . கருணைக்கடல் . எனினும் இறுதி நாளில்
கடுமையான நீதிபதியாகவே தம் மாட்சிமையில் வருவார் . அன்று அவரை யாதொரு அச்சமின்றிச் சந்திக்கவேண்டுமானால்
, இன்று , இவ்வுலகில் நடமாடு்ம் அவரை நாம் அடையாளம் கண்டு அன்புச் சேவை புரிய வேண்டும்
.
இறைவா நாங்கள் எல்லோரையும் சகோதர , சகோதரிகளாக ஏற்று அன்புற்று வாழ
வரம் தாரும் .