துணிச்சலும் சகிப்புத்தன்மையும் கொண்ட மாநகரில் வன்முறைகள் நிகழ்ந்துள்ளதே என வருந்துகிறார்
மும்பையின் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராஸியாஸ். 28,நவம்பர் ,08.
மும்பை மாநகரின் பேராயர் கர்தினால் கிராஸியாஸ் இந்தத் தாக்குதல்களை கண்டித்துள்ளார் .
காயப்பட்டோருக்கு சிகிச்சைபுரிய மருத்துவ மையங்களைத் திறந்துள்ளார் . பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத்
தமது ஆறுதலைத் தெரிவித்துள்ளார் . காவலர்களுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் தர முன்வந்துள்ளார்
கர்தினால் கிராஸியாஸ் . அகில உலக மக்களையும் பாரத நாட்டுக்கு இவ்வேளையில் நெருக்கமான
ஒத்துழைப்பைத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார் . மேலும் உணர்வில்லாத வன்முறைத் திட்டங்களால்
மூளைச் சலவை செய்யப்பட்டு இவ்வளவு கொடிய பாதகச் செயலைச் செய்துள்ளதாக கடுமையாக மனிதாபிமானமில்லாத
இந்தச் செயலைக் கண்டித்துள்ளார் கர்தினால் கிராஸியாஸ் . பல்வேறு சமய மற்றும் கலாச்சாரங்களை
சகிப்புத்தன்மையோடும் பாசத்தோடு அரவணைத்துக் கொள்ளும் மும்பையில் , சுற்றுலாப் பயணிகளாக
வந்தவர்களை தாக்கியிருப்பது நாணமில்லாத செயல் எனக் கர்தினால் கூறியுள்ளார் . உலக சமுதாயம்
நன்மையால் தீமையைத் தோல்வியுறச் செய்து அமைதியை நிலை நாட்டவேண்டும் எனக் கூறியுள்ளார்
.