குருக்கள் அனைவரும் புனித ஜான் மரிய வியான்னியைப் போல அன்னைமரியாள் பக்தியில் வளர அழைப்பு
ஆக.15,2009 அன்னைமரியின் விண்ணேற்பு விழாவை முன்னிட்டு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை,
புனித ஜான் மரிய வியான்னி அன்னைமரியா மீது கொண்டிருந்த பக்தியை விளக்கினார்.
ஒவ்வொரு
நாளும் பல தடவைகள் தனது பங்கை அன்னைமரியாவிடம் அர்ப்பணித்த இப்புனிதர், குடும்பங்களும்,
குறிப்பாக தாய்மார் தங்கள் பிள்ளைகளை அன்னைமரியாவிடம் அர்ப்பணிக்குமாறும் கேட்டுக்கொண்டார்
எனவும் திருத்தந்தை கூறினார்.
அன்னைமரியாவின் அழகால் மிகவும் ஈர்க்கப்பட்ட புனித
ஜான் மரிய வியான்னி, படைப்பில் மிக அழகான மரியா இறைவனை இரசித்தது போல வேறு எவரும் இரசித்தது
கிடையாது என்றும் கூறினார் எனவும் திருத்தந்தை கூறினார்.
புனித ஜான் மரிய வியான்னியின்
நினைவாகச் சிறப்பிக்கப்பட்டு வரும் இக்குருக்கள் ஆண்டில் உலகின் குருக்கள் அனைவரும் அப்புனிதரைப்
போல அன்னைமரியாள் பக்தியில் வளருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.