சன.18, 2010 இரண்டு
அமெரிக்க மாணவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் மகாத்மாகாந்தி தங்கியிருந்த அறையில்
தங்கும் வாய்ப்பைப் பெற்றார்கள். அந்த அறையில் இரண்டு கட்டில்கள் இருந்தன. எதில் அவர்
படுத்தார் எனத் தெரியாததால் இருவரும் இரண்டு கட்டில்களிலும் மாறி மாறிப் படுத்துக் கொண்டார்கள்.
காலையில் தாங்கள் செய்ததை அறைப் பொறுப்பாளரிடம் கூறிய போது அவர் சொன்னார்-அவர் கட்டிலில்
படுக்கவில்லை, தரையில் தூங்கினார் என்று. மகாத்மாக்கள் எளிமையானவர்கள்.