2011-05-24 14:07:40

தொழிலாளர்களுக்கான கேரளத் திருச்சபையின் புதிய திட்டம்


மே 24, 2011. கோவில்களிலும் திருச்சபை நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கென புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர் கேரளக் கத்தோலிக்க ஆயர்கள்.
சமூகத்திற்கான தங்கள் பொறுப்புணர்வை நிறைவேற்றும் விதமாக, திருச்சபை தொழிலாளர்களுக்கான 'சுரக்ஷா' என்ற காப்பீட்டுத்திட்டத்தைக் கேரள ஆயர்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்தார் தலத்திருச்சபையின் தொழிலாளர் அவையின் தலைவர் ஆயர் ஜோசப் பொருனேடம்.
இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுத்திட்ட அமைப்பு ஆகியவைகளும் கேரள ஆயர்களின் இத்திட்டத்துடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்தார் ஆயர்.
கேரளத் திருச்சபை கொணர்ந்துள்ள இத்திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் அனைவரும் ஆயுள் காப்பீட்டையும் ஓய்வூதிய வசதிகளையும் பெற உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.