ஐரோப்பிய நீதி மன்ற தீர்ப்புக்கு ஐரோப்பிய ஆயர் அவையின் வரவேற்பு
அக்.19,2011. மனிதக்கரு மற்றும் திசுக்களை அழிக்கும் வண்ணம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு
அதிகாரப்பூர்வமான உரிமைகள் வழங்கப்படக்கூடாதென்று ஐரோப்பிய நீதி மன்றம் வழங்கியுள்ள ஒரு
தீர்ப்பை ஐரோப்பிய ஆயர் அவை பெரிதும் வரவேற்றுள்ளது. மனிதக்கரு என்றால் என்ன என்பதை
தெளிவுடன் கூறியுள்ள ஐரோப்பிய நீதி மன்றம், இதனால் அறிவியல் ஆய்வுகளுக்கு ஒரு பாதையைக்
காட்டியுள்ளது என்று ஐரோப்பிய ஆயர் அவை கூறியது. மனிதக்கருவின் ஆரம்ப காலம் முதலே
அதனை முழு மனித உயிராகக் கருதி வரும் திருச்சபையின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில்
அமைந்துள்ள இந்தத் தீர்ப்பை பெரிதும் வரவேற்பதாக ஐரோப்பிய ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. இந்தத்
தீர்ப்பின் மூலம் அறிவியல் ஆய்வும் மனித உயிர்கள் மீது காட்டப்படும் மதிப்பும் இணைந்து
செல்ல ஒரு வழி பிறந்துள்ளது என்று ஐரோப்பிய ஆயர் அவை தன் நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளது.