அக்.31,2011. இறந்த கிறிஸ்தவர்களை அடக்குவதற்கான இடத்தை ஒதுக்க வேண்டும் என நேபாள கிறிஸ்தவர்களின்
தொடர்ந்த விண்ணப்பம் அந்நாட்டு அரசால் செவிமடுக்கப்படாததைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தை
மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு கிறிஸ்தவர்கள் அறிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக நேபாளத்தின்
பசுபதிநாத் இந்து கோவிலுக்குரிய நிலத்தில், இறந்த உடல்களை புதைத்து வந்த கிறிஸ்தவர்களுக்கு
அக்கோவில் நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கடந்த பிப்ரவரி முதல் அரசிடம்
இடுகாட்டிற்கான இடம் கேட்டு போராடி வருகின்றனர் நேபாள கிறிஸ்தவர்கள். இந்துக்களைப்
பெரும்பான்மையாகக் கொண்ட நேபாளத்தில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவானவர்களாக வாழும்
கிறிஸ்தவர்கள், இறந்த தங்கள் உறவினர்களின் உடல்களைப் புதைக்க இடமின்மை காரணமாக இரவு நேரங்களில்
இரகசியமாக ஆற்றில் வீசுவதும் இடம்பெற்று வருகின்றது.