திருத்தந்தையின் கியுபாவுக்கானத் திருப்பயணம், சிறப்பான அருள் தரும் தருணம் - ஹவானா கர்தினால்
டிச.17,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கியுபாவுக்கு மேற்கொள்ளும் திருப்பயணம், அந்நாட்டுக்குச்
சிறப்பான அருளை வழங்குவதாக இருக்கும் என்று ஹவானா கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அலமினோ கூறினார். 2012ம்
ஆண்டு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவுக்கு முன்னர் கியுபாவுக்கும் மெக்சிகோவுக்கும்
தான் திருப்பயணம் மேற்கொள்வதாகத் திருத்தந்தை அறிவித்திருப்பதையொட்டி இவ்வாறு கூறினார்
கர்தினால் அலமினோ. திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களது திருப்பயணம் அமைந்தது போலவே,
தற்போதைய திருத்தந்தையின் திருப்பயணமும் கியுபாவுக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும் என்று
CNA செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார் ஹவானா திருத்தந்தை 2ம் ஜான் பால்,
கியுபாவுக்கு 1998ம் ஆண்டில் திருப்பயணம் மேற்கொண்டார். கியுபத் திருச்சபையின் முயற்சியினால்,
2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் அந்நாட்டில் 100க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை
செய்யப்பட்டு இஸ்பெயினுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது