ரியோ டி ஜெனீரோ பேராயருக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள அனுதாபச் செய்தி
பிப்.08,2012. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் அண்மையில் இடிந்து விழுந்த மூன்று
கட்டிடங்களில் சிக்குண்டு இறந்தவர்களுக்காகவும், இறந்தோரின் குடும்பங்களுக்காகவும் தான்
செபிப்பதாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். அண்மையில் நடைபெற்ற இந்த விபத்தில்
உயிர் இழந்தோர், மற்றும் பாதிக்கப்பட்டோர் அனைவரையும் மனதில் வைத்து, ரியோ டி ஜெனீரோவின்
பேராயர் Orani João (John) Tempestaவுக்கு திருத்தந்தையின் அனுதாபங்களைத் தாங்கிய தந்தியை
திருப்பீடத்தின் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியுள்ளார்.