எகிப்தியக் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களின் தொடர் மதமாற்ற நடவடிக்கைகளின் சவால்களை எதிர்நோக்கி
வருகின்றனர்
மே 08,2012. எகிப்தில் முஸ்லீம்களின் தொடர் மதமாற்ற நடவடிக்கைகள் மற்றும் பாகுபாடுகளால்
கிறிஸ்தவர்கள் தொடர்ந்து நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்று வரலாற்றியல் மற்றும்
இசுலாமியக் கல்வியின் பேராசிரியர் இயேசு சபை அருள்தந்தை Samir Khalil Samir கூறினார். காலை
5 மணியிலிருந்து நாள் முழுவதும் மற்றும் வருடம் முழுவதும் இசுலாமியப் பிரச்சாரமே நடந்து
கொண்டிருக்கின்றது மற்றும் ஒரு நாளில் 5 தடவைகள் நடக்கும் இந்த மதப் பிரச்சாரத்திற்குச்
சக்திமிக்க ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று அக்குரு கூறினார். இதுதவிர,
வீடுகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளும் சப்தமாகப் பயன்படுத்தப்படுகின்றன, இது பற்றி
அந்த வீடுகளில் வாழ்கின்றவர்களிடமும் எதுவும் கேட்க இயலாது என்று கூறிய அவர், அப்படிக்
கேட்டால் இது கடவுளுடைய வார்த்தை என்று நியாயம் சொல்வார்கள் என்றும் கூறினார். பல்கலைக்கழகங்களிலும்
கிறிஸ்தவர்கள் பாகுபடுத்தப்படுகின்றனர் என்றும் அருள்தந்தை Khalil Samir கூறினார்.