இயற்கையைப் பாதுகாக்கும் வழிகளைத் தேடும் அனைவருக்கும் திருத்தந்தை வாழ்த்து
செப்.06,2012. இறைவனின் கொடையான இயற்கையைப் பாதுகாக்கும் வழிகளை ஒன்றிணைந்து தேடும் அனைவரையும்
தான் வாழ்த்துவதாகத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். இப்புதன் முதல் சனிக்கிழமை
முடிய, இத்தாலியின் Bose எனுமிடத்தில் ஆர்த்தடாக்ஸ் ஆன்மீகம் பற்றிய அகில உலகக் கருத்தரங்கு
நடைபெறுகிறது. "படைப்பின் காவலர் மனிதன்" என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில்
கலந்து கொள்ள வந்திருக்கும் அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் திருத்தந்தையின் பெயரால் வாழ்த்துத்
தந்தியோன்றை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியுள்ளார். இறைவன்
அளித்துள்ள உன்னத கொடையான இயற்கையைப் பேணும் வழிகளைத் தேடும் அனைத்து மக்களையும் தான்
ஆசீர்வதிப்பதாகத் திருத்தந்தை இத்தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.