2012-10-18 15:31:35

ஆசிய நாடுகளில் மதச் சுதந்திரம் பெருமளவில் குறைந்து வருகிறது


அக்.18,2012. ஆசியாவின் பல்வேறு நாடுகளில் மதச் சுதந்திரம் பெருமளவில் குறைந்து வருகிறது என்று கத்தோலிக்க பிறரன்பு நிறுவனம் கூறியுள்ளது.
Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு இப்புதனன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், பாகிஸ்தான், சீனா, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் பெருமளவில் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், சீனா, மியான்மார், வியட்நாம் ஆகிய நாடுகளில் மதச் சுதந்திரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறும் இவ்வறிக்கை, வடகொரியாவில் மதச் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
அனைத்திந்திய கிறிஸ்தவக் கழகத்தின் பொதுச்செயலர் ஜான் தயாள், இவ்வறிக்கையை உரோம் நகரில் வெளியிட்டுப் பேசியபோது, இந்தியாவில் மதம், ஜாதி ஆகிய இரு வழிகளிலும் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டினார்.
ஆசிய நாடுகளிலேயே தாய்லாந்து மட்டுமே சமய உரையாடல்களில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்பதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.








All the contents on this site are copyrighted ©.