வட, தென் கொரிய நாடுகள் அணு ஆயுதங்களைக் களைந்து, உரையாடல் முயற்சிகளில்
ஈடுபடுவதே இரு நாடுகளையும் காக்கும் - Seoulபேராயர்
மார்ச்,07,2013. வட, மற்றும் தென் கொரிய நாடுகள் அணு ஆயுதங்களைக் களைந்து, உரையாடல் முயற்சிகளில்
ஈடுபடுவதே இரு நாடுகளையும் காக்கும் என்று Seoul பேராயர் Yeom Soo-jung கூறினார். Seoul
உயர்மறைமாவட்டத்தின் தலைமைப் பணியையும், வட கொரியாவின் Pyongyang மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க
நிர்வாகப் பணியையும் இணைந்து ஆற்றும் தனக்கு இவ்விரு நாடுகளின் மக்களும் முக்கியமானவர்கள்
என்று பேராயர் Soo-jung எடுத்துரைத்தார். வட கொரியா அண்மையில் மேற்கொண்ட அணு ஆயுத
ஆய்வுகளையும், தென் கொரியாவில் புதிய அரசுத் தலைவர் பதவி ஏற்றதையும் குறிப்பிட்டுப் பேசிய
பேராயர் Soo-jung, இரு நாடுகளும் இணைந்து வருவதற்கு முயலவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார். தென்
கொரிய வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் அரசுத் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பதை வரவேற்பதாகக்
கூறிய பேராயர் Soo-jung, பொருளாதாரப் பாகுபாடுகளைக் களைவதற்கு இரு நாட்டு அரசுகளும் தீவிர
முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.