ஏப்.13,2013. ECOSOC என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொருளாதார மற்றும் சமூக அவையின்
தலைவர் Néstor Osorio அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை
பிரான்சிஸ். திருப்பீட ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, திருப்பீட
பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் Stanislaw Rylko ஆகியோரையும் இச்சனிக்கிழமையன்று
சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு
உரோம் புனித பவுல் பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.