தாய்லாந்தில் முதல் பெனடிக்டன் துறவு இல்லம் துவக்கப்பட்டுள்ளது
மார்ச்,24,2014. தாய்லாந்தின் முதல் பெனடிக்ட் துறவு இல்லம் அந்நாட்டின் Chiang Mai நகரில்
துவக்கப்பட்டுள்ளது அரசின் கட்டுப்பாடுகளால் வியட்நாமிலிருந்து வெளியேறிய துறவிகளைக்கொண்டு
தாய்லாந்தில் முதல் பெனடிக்ட் துறவு இல்லம் திறக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் ஏற்கனவே
ஏழு பெண் துறவு இல்லங்கள் உள்ள நிலையில், முதன்முறையாக ஆண் துறவிகளின் இல்லம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இவ்வில்லத்தின் திறப்புவிழா நிகழ்ச்சியில் தாய்லாந்தின் Chiang Mai மறைமாவட்ட ஆயர் Francis
Xavier Vira Arpondratana கலந்துகொண்டார்.