2017-01-24 14:15:00

பாசமுள்ள பார்வையில்... என் அன்னைக்கு ஒருகவிதை


எழுத்து.காம் என்ற வலைத்தளத்தில், கவிஞர், ஈஸ்வர் தனிக்காட்டுராஜா அவர்கள் பதிவுசெய்துள்ள ஒரு கவிதையிலிருந்து சில வரிகள்...

கடவுளை யாரும் கண்டதில்லை

காணாதாரும் மண்ணிலில்லை

படைத்தவனே தெய்வமென்றால் - உனை

படைத்தவளே உந்தன் தெய்வம்.

மூச்சுக்காற்றும் ஈந்து

முன்னூறு நாள்தொடசுமந்து

மாசில்லா மாரமுதூட்டிய - பெரும்

தூசில்லா தூயவள் நீயம்மா!

கஷ்டமும் நஷ்டமும்

கடன்சோகமும் சூழ்ந்தபோது

பாரமேற்றும் படகைபோலெம்மை

பக்குவமாய் கரைசேர்த்தவள் நீயம்மா!

பலமாய்மழை பெய்தநாளெல்லாம் -உன்

புடவைமுந்தானையே குடையாய்மாறும்

நீ நனைந்தெனை காத்ததைஎல்லாம்

எங்கனம் நான் மறவேனம்மா?

மறுபடி பிறவி உண்டு என்றால்

மீண்டும் நானும் பிறந்திடுவேன்!

தேயா செருப்பாய் நான் பிறந்தே - என்

தெய்வம் உனையே நான் சுமப்பேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.