எழுத்து.காம் என்ற வலைத்தளத்தில், கவிஞர், ஈஸ்வர் தனிக்காட்டுராஜா அவர்கள் பதிவுசெய்துள்ள ஒரு கவிதையிலிருந்து சில வரிகள்...
கடவுளை யாரும் கண்டதில்லை
காணாதாரும் மண்ணிலில்லை
படைத்தவனே தெய்வமென்றால் - உனை
படைத்தவளே உந்தன் தெய்வம்.
மூச்சுக்காற்றும் ஈந்து
முன்னூறு நாள்தொடசுமந்து
மாசில்லா மாரமுதூட்டிய - பெரும்
தூசில்லா தூயவள் நீயம்மா!
கஷ்டமும் நஷ்டமும்
கடன்சோகமும் சூழ்ந்தபோது
பாரமேற்றும் படகைபோலெம்மை
பக்குவமாய் கரைசேர்த்தவள் நீயம்மா!
பலமாய்மழை பெய்தநாளெல்லாம் -உன்
புடவைமுந்தானையே குடையாய்மாறும்
நீ நனைந்தெனை காத்ததைஎல்லாம்
எங்கனம் நான் மறவேனம்மா?
மறுபடி பிறவி உண்டு என்றால்
மீண்டும் நானும் பிறந்திடுவேன்!
தேயா செருப்பாய் நான் பிறந்தே - என்
தெய்வம் உனையே நான் சுமப்பேன்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |